இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘உறுப்பினர் கோரிய தர்மபுரம் பகுதியில் இருக்கின்ற முத்துமாரியம்மன் கோயிலுக்கு அவரது கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்களில் ஆய்வுக்கு செல்ல இருக்கின்றோம். இந்த கோயில்கள் மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு முதல்வரின் ஆலோசனையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை 20 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு 100 திருக்கோயில்கள் என்று திருப்பணிக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டு, கடந்த ஆண்டு சென்னையில் இருக்கின்ற 100 திருக்கோயில்கள் திருப்பணி எடுத்துக் கொள்ளப்பட்டு 70 திருக்கோயில்களின் குடமுழுக்கு நடந்தேறி இருக்கின்றது. அதேபோல் இந்த ஆண்டும் 100 திருக்கோயில்கள் மானிய கோரிக்கையில் எடுத்துக் கொள்வதற்கு முதல்வர் அனுமதி அளித்திருக்கின்றார். அந்த வகையில் இந்தாண்டு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்ற 100 திருக்கோயிலில் இந்த முத்துமாரியம்மன் கோயிலும் ஒன்றாக இருக்கும். நிச்சயம் ஓராண்டுக்குள் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்,’ என்றார்.
The post சென்னையில் 100 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படும்: பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.