இந்நிலையில், திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி சோதனைச் சாவடியில் நேற்று மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் ஆந்திர மாநில அரசுப் பேருந்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜாஹிர் ஹூசேன் என்பவர் மகன் ஆஜிஸ் (27), திருவொற்றியூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மகன் தினேஷ் (28) ஆகிய இருவரும், சீட்டின் அடியில் கஞ்சா பொட்டலங்களை ஒரு பையில் போட்டு மறைத்து வைத்திருந்தனர்.
அவர்களிடம் இருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் திருத்தணியில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒடிசாவில் குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி தெலங்கானா, ஆந்திரா வழியாக சென்னைக்கு கடத்திச் சென்றதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஆந்திர பஸ்சில் கஞ்சா கடத்திய இருவர் கைது: 11 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.