இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி பீடி இலை பறிமுதல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலந்தலை ஊருக்கு வடபுறமுள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கியூ பிரிவு போலீசார் நேற்று அதிகாலை இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் கடத்தல்காரர்கள் படகு மூலம் தப்பினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த மினிலாரியை சோதனையிட்டனர். அதில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட கட்டிங் பீடி இலைகள் சுமார் 30 கிலோ எடை கொண்ட 33 மூட்டைகளும், முழு பீடி இலைகள் சுமார் 30 கிலோ எடை கொண்ட 49 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும், மினிலாரி, 2 பைக்குகளையும் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் இலங்கை மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும்.

The post இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி பீடி இலை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: