இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி கடந்த 24.10.2018ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இதனிடையே சாமுவேல் ஜெபராஜ் இறந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ‘‘ஏழை மாணவர்களின் சமூக நீதிக்காக அரசு கல்விக் கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயில வங்கிகள் கடன் வழங்குகின்றன. இந்த திட்டத்தில் மோசடி செய்வது, லஞ்சம் பெறுவது கண்டனத்துக்குரியது. செல்வாக்கு உள்ளவர்களின் குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் கூறியுள்ளார். இந்த வழக்கில் மாணவிக்கு ரூ.62,500 கல்விக்கடன் வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளனர். இதனால் நாராயணனுக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. இவருக்கு 3 பிரிவுகளில் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையில் இருந்து, இதே வங்கியில் கல்விக் கடன் கேட்ட புகார்தாரர் உள்ளிட்ட இருவருக்கும் தலா ரூ.35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். செல்வாக்கு உள்ளவர்களின் குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயில வங்கிகள் கடன் வழங்குகின்றன. இந்த திட்டத்தில் மோசடி செய்வது, லஞ்சம் பெறுவது கண்டனத்துக்குரியது.
The post கல்விக்கடன் வழங்க லஞ்சம் வாங்கிய வங்கி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை: ரூ.1.50 லட்சம் அபராதமும் விதிப்பு appeared first on Dinakaran.