பச்சரிசி – 4 கப்,
கெட்டியான புளிக்கரைசல் – 1½ கப்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – ¼ கப்,
துருவிய வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க:
வரமிளகாய் – 6,
வெந்தயம் 1 டீஸ்பூன்,
எள் – 1 டேபிள் ஸ்பூன்,
தனியா – 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்.
தாளிக்க:
நல்லெண்ணெய், சமையல் எண்ணெய் – தலா 4 டேபிள்ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 10 இதழ்கள், உடைத்த முந்திரி துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
வெறும் வாணலியில் அரிசி, கடலைப்பருப்பு இரண்டையும் வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்கவும். குக்கரில் எண்ணெய் (8 ஸ்பூன்) விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து 1½ கப் புளிக்கரைசல், 7 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், வெல்லத்தூள் சேர்த்து வறுத்து வைத்துள்ள அரிசி, பருப்பு சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்து ஒரு விசில் வந்ததும் இறக்கி நன்றாக கலந்து பரிமாறவும்.
The post புளிச் சுண்டல் appeared first on Dinakaran.