ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழ்நாட்டின் விடுதலை போராட்ட வீரர்கள் வவுசி, வேலு நாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்டோர் குறித்த அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில், பொது இடங்களுக்கு அவர்களின் பெயர்கள் சூட்டப்படுமா என்றும் பாலு கேள்வி எழுப்பினார்.
The post தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்கீகரிக்க வேண்டும் : திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு வேண்டுகோள் appeared first on Dinakaran.