இந்நிலையில், நேற்று இரவு தலசயன பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவுக்கான, ஏற்பாடுகளை தலசயன பெருமாள் கோயில் நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் தெப்ப உற்சவ கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
The post மாசி பவுர்ணமியை முன்னிட்டு தலசயன பெருமாள் கோயில் தெப்போற்சவம் appeared first on Dinakaran.
