அந்தியூர், மார்ச் 13: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி, சவுண்டபூர், கீழ்வாணி, மூங்கில் பட்டி, மேவாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3மணி முதல் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் அந்தியூரில் இருந்து அத்தாணி-சத்தியமங்கலம் மெயின்ரோட்டில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மழையின் காரணமாக கோபி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூர் செல்லும் வாகனங்கள் அத்தாணி ரோட்டில் மழை நீரில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டவாறு நீந்தி சென்றது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இருப்பினும் தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வந்தது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலை வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post அந்தியூர் அருகே சூறைக்காற்றுடன் கனமழை appeared first on Dinakaran.
