சேலம், மார்ச் 11: சேலம் மாநகர் மாவட்ட கொண்டலாம்பட்டி பகுதி தேமுதிக சார்பில் 25ம்ஆண்டு வெள்ளிவிழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஆகியவை கொண்டலாம்பட்டி காய்கறி மார்க்கெட் பகுதியில் நடந்தது. செந்தில்குமார் தலைமை தாங்கினார். முருகேசன் வரவேற்றார். நிர்வாகிகள் சிவஞானம், ராதாகிருஷ்ணன், பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் பட்டதாரி ஆசிரியர் அணி துணைச்செயலாளர் பேராசிரியர் ஏழுமலை, மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறைப்புரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post தேமுதிக பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.
