இந்நிலையில், நேற்று மாலை சமரசம் பேசலாம் என கருப்பசாமியை முருகன் காலனி பகுதிக்கு மாரிமுத்து அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாரிமுத்துவின் உறவினர்களான குமார் (28), கணேசன் (45), எலி என்ற ஜோசப் (22) ஆகியோர் இருந்துள்ளனர். பேச்சுவார்த்தையில் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு கருப்பசாமி, மாரிமுத்துவை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாரிமுத்து அவரது உறவினர்கள் சேர்ந்து அரிவாளால் கருப்பசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
இதில் படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிவகாசி பகுதியில் சுற்றித்திரிந்த மாரிமுத்து உள்ளிட்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு பிடித்து கைது செய்தனர்.
The post மனைவியின் தகாத உறவை கண்டித்த பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொலை: கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.
