இதுபற்றி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும். வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளை பகுத்தாய்வு செய்யும் பணி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் வருவாய் நடுநிலை விகிதம் (ஆர்என்ஆர்) 15.8 சதவீதத்திலிருந்தது. அது 2023ல் 11.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. தற்போது இன்னும் குறையும். எனவே வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. அந்த வேலை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஜிஎஸ்டி வரி மேலும் குறையும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.
