வாலிபர் மீது வழக்கு

கெங்கவல்லி, மார்ச் 8: கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(75). இவர், கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில், காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ராமசாமி உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி எஸ்ஐ தினேஷ்குமார் வழக்குப்பதிந்து விசாரித்தார். இதில், டூவீலர் ஓட்டி வந்தது கடம்பூர் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் வினோத்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வினோத் மீது கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து, டூவீலரை கைப்பற்றினர். விபத்தில் வினோத்துக்கு காலில் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: