சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் சுகாதாரமற்ற கெட்டுப்போன குளிர்பானங்களை விற்பனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்பானம் காலாவதி ஆகி இருப்பதாக குற்றம் சாட்டி கேன்டீன் நிர்வாகத்தினருடன் நித்யா என்பவர் வாக்குவாதம் செய்துள்ளார். காவல்துறையினர் அனைத்தையும் சோதனை செய்ததில் சில குளிர்பான பாட்டில்களில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திரையரங்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சென்னை ஆல்பர்ட் திரையரங்கில், காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்ததாக புகார்!! appeared first on Dinakaran.