பொருளாதாரத்துறை செயலாளர்அஜய் சேத்திற்கு கூடுதலாக வருவாய்த்துறை ஒதுக்கீடு

புதுடெல்லி: வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றி வந்த துஹின் காந்தா பாண்டே கடந்த இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய(செபி) தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் வருவாய்த்துறை செயலாளர் பணியிடம் காலியானது.

இந்நிலையில் தற்போது பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக பொறுப்பு வகித்து வரும் அஜய் சேத், கூடுதலாக வருவாய்த்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த பணியாளர் அமைச்சக உத்தரவின்படி, வருவாய்த்துறை செயலாளர் பதவிக்கு வழக்கமான பொறுப்பாளர் நியமிக்கப்படும் வரை அஜய் சேத் அந்த பணியில் இருப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொருளாதாரத்துறை செயலாளர்அஜய் சேத்திற்கு கூடுதலாக வருவாய்த்துறை ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: