அப்போது, சுற்றுலா வழிகாட்டி ஒருவர், கடற்கரை கோயில் கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி பழமை மாறாமல் தொல்லியல் துறையால் கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற வரலாற்று தகவல்களை விரிவாக விளக்கி கூறினார். முன்னதாக, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தூதர் வருகையையொட்டி கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
The post மாமல்லபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புராதன சின்னங்களை கண்டு ரசித்த அமெரிக்க துணை தூதர் appeared first on Dinakaran.
