இதுகுறித்த புகாரின்பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வாலிபரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு மீனம்பாள் நகர் மேம்பாலம் அருகில் பதுங்கி இருந்த கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகர் 6வது தெருவை சேர்ந்த சதீஷ் என்கின்ற எட்டப்பன் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், திருவொற்றியூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்து வருவதும், எட்டப்பன் மீது ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. பிறகு கைது செய்யப்பட்ட எட்டப்பனிடமிருந்து மிஷினை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் டிடிஆரின் டிக்கெட் பரிசோதனை மிஷினை திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.
