அப்போது புளியந்தோப்பு விஓசி நகர் 6வது தெருவில் உள்ள ஒரு கம்பெனிக்கு சென்று இருவரும் தூங்கி உள்ளனர். திடீரென நேற்று காலை 8 மணி அளவில் இர்பான் தான் வைத்திருந்த ஆடு வெட்டும் கத்தியால் ஹமீதுல்லாவை சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது அதனை தடுக்க வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ரத்தன் என்பவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஹமிதுல்லாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று ஓட்டேரி தாசமகான் பகுதியைச் சேர்ந்த இர்பானை கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு சிறையில் அடைத்தனர்.
The post தாயை பற்றி அவதூறு பேசியதால் மது, பிரியாணி வாங்கி கொடுத்து நண்பனை வெட்டிய வாலிபர்: அயனாவரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.
