கடந்த ஆண்டு பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமோக வெற்றி பெற்று தற்போதைய ஆந்திர துணை முதல்வராக பவன்கல்யாண் உள்ளார்.இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த திரைப்பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி பங்கேற்று பேசுகையில், `ஆரம்பத்தில் பிரஜா ராஜ்யம் கட்சியை நான் 18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். காலப்போக்கில் எனது கட்சி தற்போது ஜனசேனா கட்சியாக உருமாறியுள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் நடிகர் சிரஞ்சீவி நேரடி அரசியலில் ஈடுபடாமல் தனது தம்பியின் மூலம் அரசியல் நடத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
The post பிரஜா ராஜ்யம் உருமாறி ஜனசேனா கட்சியாக உள்ளது; நடிகர் சிரஞ்சீவி தகவல் appeared first on Dinakaran.
