புதுக்கோட்ைட மாவட்டம் ஆலங்குடி அடுத்த காட்டுப்பட்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக புதுக்கோட்ைட, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். 700 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
கோயில் திடலில் காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை பிற்படுத்தப்பட்ேடார் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர். களத்தில் பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து நின்று விளையாடியது. காளைகள் முட்டி காயமடைந்த வீரர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், மிக்சி, எவர்சில்வர் பாத்திரம் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் அழைத்து வரப்பட்டன. 200 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை ரங்கம் ஆர்டிஓ சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 மாடுபிடி வீரர்கள் என்ற அடிப்படையில் களம் இறக்கப்பட்டனர். வெற்றி பெற்ற வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.
The post புதுகை, திருச்சியில் ஜல்லிக்கட்டு; 1,300 காளைகள் ஆவேச பாய்ச்சல்: 450 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.
