முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை, மெஹர் தொடர்ந்து விமர்சித்ததால் அவர் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதான மெஹர் அஃப்ரோஸ், வங்கதேசத்தின் பிரபலமான நடிகை மட்டுமல்ல; சினிமா இயக்குனராகவும், நடனக் கலைஞராகவும், பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார். அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த மெஹ்ரின் கைது செய்யப்படும் முன், ஜமால்பூரில் உள்ள அவரது மூதாதையர் வீடு தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இந்த வீடு அவரது தந்தை முகமது அலிக்கு சொந்தமானது; அவர் ஷேக் ஹசீனா கட்சியை சேர்ந்தவர் ஆவார். கடந்த தேர்தலில் அவாமி லீக் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நடிகையின் தாய் பேகம் தஹுரா அலி, பெண்களுக்கான தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷேக் ஹசீனாவின் மூதாதையர் சொத்துகள், நடிகை மெஹர் அஃப்ரோஸ் சொத்துகள் தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், மெஹர் அஃப்ரோஸ் கைதான விவகாரத்தால் வங்கதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
The post முகமது யூனுஸ் ஆட்சியை விமர்சித்ததால் தேசதுரோக வழக்கில் நடிகை கைது: வங்கதேசத்தில் பதற்றம் appeared first on Dinakaran.
