வடலூர் : தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வடலூர் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சூர்யா(29). இவரது மனைவி சினேகா. இவர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது நான்காவது ஒன்றரை வயது பெண் குழந்தை மைதிலி. நேற்றுமுன்தினம் மதியம் 3 மணி அளவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மைதிலி, அங்கு வாட்டர் பாட்டிலில் வைத்திருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அருகில் இருந்த உறவினர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து சூர்யா கொடுத்த புகாரின் பேரில், வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த குழந்தை பலி appeared first on Dinakaran.
