பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி

திருச்சி, பிப்.6:திருச்சியில் மாவட்ட அளவில் நடந்த பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் ஆர்எஸ்கே பள்ளி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே கூடைப்பந்து போட்டி, திருச்சி ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு அகாடமியால் நடத்தப்பட்டது. 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மட்டும் நடந்த இப்போட்டியில் 7 பள்ளி அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், பெண்கள் பிரிவில் ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளி, பாய்லர் பிளான்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை 13-12 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது. சந்தானம் வித்யாலயா, கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளியை 19-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட அலுவலர், சுகந்தி அண்ணாவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். திருச்சி, கேர் சர்வதேச பள்ளி முதல்வர் ப்ரீத்தி ஆராவமுதன், திருச்சி மாவட்ட கூடைப்பந்து சங்கத்தை சேர்ந்த ரான்சன் தாமஸ் ஞானராஜ், செயலாளர் கண்ணன், ஒய்.எம்.சி.ஏ. தலைவர் ஜான் ராஜசேகரன், செயலாளர் நோபிள் ரிச்செர்ட், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

The post பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி appeared first on Dinakaran.

Related Stories: