அதோடு இதற்கு முன்பு தான் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவில் இடம் பெற்று இருக்கும் தகவல்கள் தொடர்பான அறிக்கையை வழங்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இம்மனு நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கூற வாய்ப்பு இருக்கிறது என்று கூறி மனு மீதான விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதோடு கூகுள், பாலிவுட் டைம் மற்றும் இணையத்தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
The post ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு கூகுளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.
