பிரான்ஸ் சினிமாவில் முதன் முறையாக வெளியான முதல் ‘மீடூ’ புகார் இதுவாகும். இவ்விவகாரம் பிரான்சில் பூதாகரமாக வெடித்ததால், இதேபோல் பல பெண்கள் கிறிஸ்டோஃப் ருகியா மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களை கூறினர். அடீல் ஹேனெலின் புகார் குறித்து பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் கிறிஸ்டோஃப் ருகியா மீது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். ஆனால் கிறிஸ்டோஃப் ருகியா தனக்கு எதிராக கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஒரு கட்டத்தில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவர் சிறையில் இருந்து தப்பினார். பின்னர் அவரை தேடி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாரிஸ் நீதிமன்றம் தற்போது கிறிஸ்டோஃப் ருகியா மீது கூறப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கிற்கு தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்டோஃப் ருகியாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதுகுறித்து கிறிஸ்டோஃப் ருகியாவின் வழக்கறிஞர் ஃபேன்னி கொலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எனது கட்சிக்காரர் கிறிஸ்டோஃப் ருகியா குற்றமற்றவர்; இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்’ என்றார்.
The post 35 வயது நடிகை 12 வயது சிறுமியாக இருக்கும் போது பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பிரான்ஸ் நடிகருக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
