சங்ககிரி, ஜன.28: சங்ககிரியில் இருந்து ஆர்எஸ் செல்லும் சாலை, நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய பணியாளர்கள் பள்ளம் தோண்டினர். ஆனால், முழுமையாக செய்யாமல் அப்படியே விட்டுச் சென்றனர். இதனால், நேற்று முன்தினம், குழாய் வழியாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் ஓடியது. அதிகாரிகள் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை மாற்றி, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்று கடந்த 26ந் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நேற்று பணியாளர்கள் பொக்லைன் மூலம் பள்ளம் பறித்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர்.
The post சங்ககிரியில் சிதிலமான குடிநீர் குழாய் சீரமைப்பு appeared first on Dinakaran.
