இல்லையென்றால், அந்நாட்டின் மீது மிக கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், பேட்டி அளித்துள்ள புதின், 2020ம் ஆண்டு தேர்தலில் ட்ரம்பின் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால், ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது என்றும் கூறியுள்ளார். ட்ரம்ப் ஒரு புத்திசாலி என்று பாராட்டி உள்ள அவர், நடைமுறை எதார்த்தங்களை அறிந்தவர் ட்ரம்ப் என்றும் உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். ரஷ்யா மீது ட்ரம்ப் பொருளாதார தடை விதிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ஏனென்றால், அது அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றும் புதின் கூறினார். இருவரும் சந்தித்து பேசினால் முக்கிய பிரச்சனைகளில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் எங்கு, எப்போது பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறித்து புதின் எதுவும் கூறவில்லை.
The post 2020ம் ஆண்டு தேர்தலில் ட்ரம்பின் வெற்றி பெற்றிருந்தால், ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு இருக்காது : அதிபர் புதின் அறிவிப்பு!! appeared first on Dinakaran.