காஷ்மீரில் கடும் குளிர் அலை: ஷோபியானில் -6.4 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது!

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் குளிர் அலை நீடித்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை உறைபனி நிலைக்கு வெகுவாகக் குறைந்துள்ளதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள ஷோபியான் பகுதி, பள்ளத்தாக்கிலேயே மிகவும் குளிரான இடமாகப் பதிவாகியுள்ளது. இங்கு குறைந்தபட்ச வெப்பநிலை -6.4 டிகிரி செல்சியஸ் ஆகக் குறைந்துள்ளது.

பிற முக்கியப் பகுதிகளின் வெப்பநிலை விவரம்:
புல்வாமா மற்றும் பாம்பூர் நகரங்கள்: -5.2°C
பாரமுல்லா: -5.1°C
அனந்த்நாக்: -4.9°C
ஸ்ரீநகர் விமான நிலையம்: -4.8°C
பஹல்காம்: -4.4°C
காசிகுண்ட்: -4.2°C
ஸ்ரீநகர் நகரம் மற்றும் பட்காம்: -4.1°C
குப்வாரா: -3.5°C
குல்மார்க்: -2.6°C
கோக்கர்நாக்: -0.2°C (பள்ளத்தாக்கில் ஒப்பீட்டளவில் அதிகபட்சமாகப் பதிவானது)

லடாக்கிலும் நிலைமை மோசம்;
லடாக் பகுதியிலும் குளிர் அலை கடுமையாக உள்ளது.
லே: -9.0°C
கார்கில்: -7.8°C
நுப்ரா பள்ளத்தாக்கு: -7.6°C

வானிலை முன்னறிவிப்பு: டிசம்பர் 8-ல் பனிப்பொழிவு காணப்படும் எனவும் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இரவு வெப்பநிலை உறைபனிக்குக் கீழே இருப்பதால், வரும் நாட்களிலும் இதே குளிர் அலை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 6, 7ம் தேதி பொதுவாக மேகமூட்டத்துடனும் வறண்ட வானிலையுடனும் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 8ம் தேதி உயரமான சில பகுதிகளில் லேசான பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: