தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் உள்ள ஒன்பது கிராமங்கள் நாசமாகியுள்ளன. மேலும் தொடர் மழையால், மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால், பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன.
காணாமல் போன 8 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளம்; உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு! appeared first on Dinakaran.