கோவை: கோவையில் ஓடை அருகில் கட்டப்பட்ட வீடு மண் அரிப்பால் இடிந்து விழுந்தது. கோவை சங்கனூர் ஹட்கோ காலனி அருகே மாடி வீடு திடீரென்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.