இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உமாபதி மற்றும் குமணன், ‘காவிரி-வைகை-குண்டலாறு இணைப்பு திட்டம் தொடர்பான விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கர்நாடகா அரசு முகாந்திரம் இல்லாத காரணங்களையும், பொய்யான தகவல்களையும் வழங்கி வருகிறது. மேலும் திட்டம் குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தனர். தொடர்ந்து கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழ்நாட்டின் காவிரி – வைகை – குண்டலாறு இணைப்பு திட்டத்திற்கு இடைக்காலமாக தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘காவிரி-வைகை- குண்டலாறு இணைப்பு திட்டம் தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் இருந்து முதற்கட்ட அனுமதி கூட வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது திட்டத்திற்கு எப்படி தடை விதிக்க முடியும். அது சாத்தியமே கிடையாது. இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது. மேலும் காவிரி-வைகை-குண்டலாறு இணைப்பு திட்டம் தொடர்பான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம் பதிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post காவிரி-வைகை-குண்டலாறு இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.
