விக்கிரவாண்டி பள்ளிக் குழந்தை உயிரிழப்பு: பதில் தர ஐகோர்ட் உத்தரவு

விழுப்புரம்: விக்கிவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி குழந்தையின் தந்தை பழனிவேல் மனு தாக்கல் செய்த நிலையில், தமிழ்நாடு அரசு, காவல்துறை, சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி போலீசார் விசாரணையை முறையாக நடத்தவில்லை என சிறுமியின் தந்தை பழனிவேல் தொடர்ந்த மனு மீதான விசாரணை பிப்.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post விக்கிரவாண்டி பள்ளிக் குழந்தை உயிரிழப்பு: பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: