மேலும், அங்குள்ள கடைகளிலும் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதை தவிர்க்க தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பின் மையப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அப்போதைய எம்.பி.(திமுக) ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு 8 விளக்குகள் கொண்ட உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த உயர் கோபுர மின்விளக்கு கடந்த 2 மாதங்களாக எரியவில்லை, மேலும் இதேபோல் இதன் அருகில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மற்றொரு மின் விளக்கு போடப்பட்டது. அந்த உயர்கோபுர மின் விளக்கும் கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் பழுதான உயர் கோபுர மின்விளக்கு; இருளில் மூழ்கிய பஸ் நிறுத்தம்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.
