ஜெயங்கொண்டம் ,ஜன.14: ஜெயங்கொண்டம்அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் பவுர்ணமி வலம் நேற்று நடைபெற்றது. பவுர்ணமியையொட்டி நேற்று 3 மணிக்கு கணக்க விநாயகருக்கு அபிஷேகம், 4.30 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு சந்தனம், பால், திரவியப்பொடி, மாவுப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது. அதன்பின் பிரகதீஸ்வரர் முன்னின்று தீபஒளி ஏற்றி கோயில் சுற்றி உள்ள கிராமங்களான குறுக்கள்தெரு கணக்கவிநாயகர் கோயில் வழியாக மீண்டும் கோயில் வந்து பின்னர் பிரகாரம் வலம் வந்து அங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடைபெற்றது. பௌர்ணமி கிரிவலம் என்பதால் ஏராளமான சிவனடியார்கள் உள்ளிட்ட ஏராளமானபக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மாமன்னன் இராஜேந்திரசோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
The post கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி வலம் appeared first on Dinakaran.
