ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாகவும், இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை கழகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது
தேமுதிக புறக்கணிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் தேமுதிக புறக்கணிக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவும், தேமுதிகவும் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
The post பிப்வரி 5ம் தேதி அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக மற்றும் தேமுதிக appeared first on Dinakaran.
