அதையேற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரி முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். இவ்வழக்கு சிஐடி போலீசாரிடம் மாநில அரசு ஒப்படைத்தது. இப்புகாரில் சிஐடி போலீசார் முன் எடியூரப்பா ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். இந்நிலையில் தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்யகோரி எடியூரப்பா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனு நேற்று நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. எடியூரப்பா தரப்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தார். அதை தொடர்ந்து அடுத்த விசாரணையை ஜனவரி 15ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
The post எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு ஜன.15ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
