மாண்டியாவில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: எம்எல்ஏ பி. ரவிகுமார் உறுதி

மண்டியாவில் விஞ்ஞானமற்ற சாலை மேம்பாடுகளை அகற்றுவது உள்ளிட்ட வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என, எம்எல்ஏ ரவிகுமார் உறுதியளித்தார். தாலுகா வி.சி. பண்ணை கேட் (மைசூரு-பெங்களூரு நெடுஞ்சாலை) அருகே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பிரச்னைகளை கேட்டறிந்த அவர், ஹனகெரே முதல் கிர்கந்தூர் கேட் வரை சாலையை பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலையில், அறிவியல்பூர்வமற்ற சாலை குழிகள், மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை, திருப்பங்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் அருகே வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படவில்லை, சாலைகளில் வர்ணம் பூசப்படவில்லை என பல புகார்கள் வந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாவட்ட நிர்வாகம், காவல் துறை, பேரூராட்சி, மூடா அதிகாரிகளுடன் சாலையை கண்காணித்து வருகிறோம். எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள் சர்வீஸ் ரோட்டில் இருந்து நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டும் என்றால், தகவல் பலகை இல்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

The post மாண்டியாவில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: எம்எல்ஏ பி. ரவிகுமார் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: