சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

 

விழுப்புரம், ஜன. 11: ரயிலில் சென்னைக்கு மதுபாட்டில் கடத்திச் சென்ற வாலிபரை விழுப்புரத்தில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.புதுவையில் இருந்து விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்களில் மதுபாட்டில் கடத்தி செல்வதாக வந்த புகாரையடுத்து ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் பயணிகள் ரயில் வந்தபோது அதில் ஏறி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் 25 மதுபாட்டில்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த சதீஷ்(28) என்பதும் இவர் புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டிலை வாங்கிகொண்டு ரயிலில் சென்னைக்கு கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: