விவசாயியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

பாப்பாரப்பட்டி, ஜன.11: பென்னாகரம் அருகே பவளந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார்(37), விவசாயி. இவரது உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி, பெரியசாமி(37) ஆகியோருக்கிடையே கடந்த 26ம் தேதி தகராறு ஏற்பட்டது. அவர்களை சரத்குமார் சமரசப்படுத்தினர். அப்போது, ஆத்திரமடைந்த பெரியசாமி திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சரத்குமாரை குத்தி விட்டு தப்பியோடினார். இதில், படுகாயமடைந்த பெரியசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிந்து பெரியசாமியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

The post விவசாயியை கத்தியால் குத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: