மளிகை கடைக்காரரை தாக்கிய 2பேர் கைது

ஓசூர், ஜன.11: ஓசூர் அருகே பாகலூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால்(43). மளிகை கடை நடத்தி வருகிறார். அருகிலுள்ள தேர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம்(51). கடந்த 8ம் தேதி வேணுகோபால் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது ஜெயராம் வளர்த்து வரும் நாய், கடிப்பதற்காக பாய்ந்துள்ளது. இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது. அன்றிரவு ஜெயராம் மற்றும் நவீன்(27) ஆகியோர் வேணுகோபாலின் மளிகை கடைக்கு சென்று அவரை தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பாகலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து ஜெயராம், நவீன் ஆகியோரை கைது செய்தனர். அதேபோல, ஜெயராமின் மனைவி ஆனந்தம்மாள்(50) என்பவர் கொடுத்த புகாரின்பேரில், வேணுகோபால் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மளிகை கடைக்காரரை தாக்கிய 2பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: