‘தனக்கு மிஞ்சி தான் தானம்’ என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனிதன் கடன் வாங்கி தானம் செய்தான் என்றால் அது மயில்சாமி ஒருவராகத்தான் இருக்கும். என்னிடத்தில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் தனக்காக எதுவும் கேட்கவே மாட்டார். யாராவது ஒருவருக்கு உதவி செய்வதற்காகத்தான் அவரது அழைப்பு வரும். எம்ஜிஆரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து மறைந்துள்ளார். மனோபாலாவை பொருத்தவரை பல நிகழ்வுகளில் அவரே பொறுப்பை எடுத்துக் கொள்வார். எந்த பிரச்சினை வந்தாலும் அன்று இரவே அழைத்து அதை சமரசமாக முடித்து வைப்பார். எல்லோருடனும் தொடர்ந்து நட்பில் இருப்பார். மூன்று பேரையும் மிஸ் பண்ணுகிறோம். அவர்களது குடும்பங்களுக்கு நிச்சயம் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு கார்த்தி பேசினார்.
The post மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்போம்: கார்த்தி பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.