கள விசாரணை செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாய்வு செய்திடும் பொருட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் டவர் பூங்கா பகுதியில் விண்ணப்பித்த வாக்காளர்களின் வீடுகளுக்கு கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ம.பிரதிவிராஜ், நேற்று நேரில் சென்று, வாக்காளர்களின் விண்ணப்பப் படிவத்தின் உண்மை நிலைகள் குறித்து கேட்டறிந்து சான்றுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.சுரேஷ் மற்றும் சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post சிறப்பு முகாமில் விண்ணப்பித்த புதிய வாக்காளர் வீடுகளில் தேர்தல் அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.
