இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பரோடா, 5 முறை பைனலில் விளையாடி இருக்கிறது. மும்பை ஒரு முறை மட்டுமே பைனலில் விளையாடியது. இந்த இரு அணிகளும் முஷ்டாக் அலி தொடர்களில் 13 முறை மோதியதில் மும்பை 7 முறையும், பரோடா 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை பைனலில் விளையாடி பஞ்சாப்பிடம் கோப்பையை பறிகொடுத்த க்ருணால் பாண்டியா தலைமையிலான பரோடா இந்த முறையும் தொடர்ந்து இறுதி போட்டிக்கு முன்னேற முனைப்புக் காட்டும்.
தொடர்ந்து நடைபெறும் 2வது அரையிறுதியில் டெல்லி – மத்திய பிரதேச அணிகள் மோதுகின்றன. முஷ்டாக் அலி தொடரில் இந்த அணிகள் ஏற்கனவே மோதிய 2 ஆட்டங்களிலும் டெல்லி அணிதான் வெற்றி பெற்றுள்ளது. எனினும் டெல்லி இதுவரை பைனலுக்கு முன்னேறியதில்லை. அதனால் கிடைத்த தோல்விகளுக்கு பதிலடி தரும் வகையில் டெல்லியை வீழ்த்தி 2வது முறையாக இறுதி ஆட்டத்தில் விளையாட ம.பி இன்று அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post சையத் முஷ்டாக் அலி கோப்பைக்காக இறுதிச் சுற்றில் நுழைவது யார்? பரோடா-மும்பை, டெல்லி-மபி மோதல் appeared first on Dinakaran.
