ஆந்திரா: டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திராவில் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். லாரியின் அடியில் கார் சிக்கிக் கொண்ட நிலையில் அதில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நர்பால் என்ற இடத்தில் இன்று பிற்பகல் பயங்கர சாலை விபத்து நடந்தது. சிங்கனமாலா மண்டலம், நயனப்பள்ளி கிராஸில் காரின் டயர் வெடிதத்தில் கட்டுப்பாட்டை இழந்த ​​எதிரே வந்த லாரி மீது மோதியது.

இந்த சம்பவத்தில் கார் முற்றாக சேதமடைந்தது. இதில் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அனந்தபூர்-கடப்பா நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

இறந்த அனைவரும் அனந்தபூரைச் சேர்ந்த சந்தோஷ், சண்முக், வெங்கண்ணா, ஸ்ரீதர், பிரசன்னா மற்றும் வெங்கி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆறு பேரும் தாடிபத்ரியில் நடந்த நகர கீர்த்தனை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.

The post ஆந்திரா: டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: