மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை, 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்கு யூடியூபர் இர்ஃபான் கடிதம் அனுப்பியுள்ளார். வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடித்ததின் மூலமாக தெரிவித்துள்ளார். அதில், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் இர்ஃபான் குறிப்பிட்டுள்ளார்.
The post தொப்புள் கொடி வீடியோ விவகாரம்: மருத்துவத்துறைக்கு வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்பான் கடிதம் appeared first on Dinakaran.