செங்குன்றம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்: மாதவரம் எம்எல்ஏ வழங்கினார்

புழல்: செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 145 மாணவர்களுக்கும், பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 333 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு, பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாமிநாதன், அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஏ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாதவரம் எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு, சைக்கிள்களை பள்ளி மாணவ – மாணவிகளுக்கு வழங்கினார்.

இதேபோல், செங்குன்றம் அடுத்த வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 100 மாணவர்களுக்கும், பெண்கள் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 78 மாணவிகளுக்கும், புழல் அடுத்த லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 85 மாணவ – மாணவிகளுக்கும், அந்தந்த பள்ளி வளாகத்தில் விலையில்லா சைக்கிள்களை எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாதவரம் மண்டலக்குழு தலைவர் நந்தகோபால், புழல் ஒன்றிய திமுக செயலாளர் புழல் சரவணன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வமணி, மாவட்ட பிரதிநிதி ரமேஷ், முன்னாள் ஊராட்சிமன்ற துணை தலைவர் நந்தகுமார், செங்குன்றம் பேரூராட்சி கவுன்சிலர்கள் இளங்கோவன், கோதண்டராமன், வினோதினி பாலாஜி, முன்னாள் கவுன்சிலர் லெனின், பேரூர் திமுக துணை செயலாளர்கள் சீனிவாசன், கபிலன், வழக்கறிஞர் சுதாகர், அன்பு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் அசோகன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சித்ராபாபு வரவேற்றார். பூண்டி பிடிஓ கோபிகண்ணன், பள்ளியின் ஆசிரியர்கள் வேணு, ரவி, சக்கரவர்த்தி, ஷேபனலட்சுமி, வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் கலந்துகொண்டு 47 மாணவ -மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இறுதியில் பள்ளி துணைத் தலைமையாசிரியர் கதிரொளி நன்றி கூறினார்.

The post செங்குன்றம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்: மாதவரம் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: