இந்நிலையில் அமீது உசேன், மவுரீஸ், பைசல் உசேன் ஆகிய மூன்று பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி இளவழகன் மனுவை விசாரித்து அமீது உசேனுக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்கவும், மவுரீசுக்கு 2 நாட்கள், பைசல் உசேனிற்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதற்காக கொண்டு சென்றனர்.
The post தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு வழக்கு; 3 பேரிடம் என்.ஜ.ஏ அதிகாரிகள் விசாரணை: சிறப்பு நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.