ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகளை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு..!!

சென்னை: ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகளை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கத்தால் செயல்படும் ரேஷன் கடைகளில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வழங்கும் சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது. சேமிப்பு, நிரந்தர வைப்பு, கடன் திட்டங்கள் குறித்த கையேடுகளை ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகளை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: