சென்னை : பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம், இதுவரை ரூ.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.