கலைஞர் சிலை அமைப்பு குழு தலைவருக்கு மோதிரம்

நாமக்கல், அக்.24: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பரமத்திரோடு செலம்பகவுண்டர் பூங்கா அருகில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழு உருவச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. 8 அடி உயரம், 3 அடி அகலத்தில், வெண்கல சிலையாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலைஞர் சிலையை திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து சிலை அமைப்பு குழு தலைவரும், மாவட்ட திமுக அவைத் தலைவருமான மணிமாறனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கமோதிரம் பரிசாக அணிவித்து வாழ்த்தினார்.

The post கலைஞர் சிலை அமைப்பு குழு தலைவருக்கு மோதிரம் appeared first on Dinakaran.

Related Stories: