விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல், அக்.18: நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல், திருச்செங்கோடு கோட்டாட்சியர்கள் தலைமையில் இன்று(18ம் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. நாமக்கல் கோட்டத்துக்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும், திருச்செங்கோடுக்கு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: